/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதையில் தகராறு வாலிபருக்கு கை கட்டு
/
போதையில் தகராறு வாலிபருக்கு கை கட்டு
ADDED : அக் 31, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, இந்திரா சிக்னலில் கடலுார் சாலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு, குடிபோதையில் இருந்த 30 வயது அடையாளம் தெரியாதவாலிபர் ஒருவர் ஆபாசமாக பேசி பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்டார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து, கையை கயிற்றால் கட்டி சாலையில் படுக்க வைத்தனர். இது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும்புகார் தெரிவித்தனர்.
அங்கிருந்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டு இருந்த வாலிபரை மீட்டு, எச்சரித்து விழுப்புரம் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

