sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 11ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா

/

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 11ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 11ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 11ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா


ADDED : ஜன 09, 2024 07:23 AM

Google News

ADDED : ஜன 09, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில், 11ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா கடந்த 7ம் தேதி துவங்கி நாளை மறுநாள் 11ம் தேதி வரை நடக்கிறது.

விழாவையொட்டி, நேற்று காலை துவங்கிய லட்சார்ச்சனை வரும் 11ம் தேதி காலை 8:00 மணி வரை நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, தனுர் மாத பூஜை துவங்குகிறது. காலை 6:00 மணிக்கு மேல் யாகசாலையில் 7ம் கால ஹோமம் நடக்கிறது.

பின், காலை 8:30 மணிக்கு 2,000 லிட்டர் பால் அபிஷேகம், வாசனை திரவியங்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு யாகசாலை மகா பூர்ணாஹூதி முடிந்து, கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு 130 கிலோ எடை ஏலக்காய் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட உள்ளது.

அன்று மாலை 4:00 மணிக்கு ஸ்ரீராமர் சீதை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, சீதா திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பகல் 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜெயமாருதி சேவா டிரஸ்ட் மேனஜிங் டிரஸ்ட் செய்து வருகிறது.






      Dinamalar
      Follow us