ADDED : அக் 03, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் தினம் குடித்துவிட்டு வருவதை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால் நெடுங்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்த மோகன்,35; கூலி தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி. மோகன் தினம் குடித்துவிட்டு வருவது வழக்கம். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.கடந்த 28 ம் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மோகனை அவரது மனைவி கண்டித்து திட்டினார். இதில் மனமுடைந்த மோகன் களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.