ADDED : நவ 22, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரியாங்குப்பம், சுப்பையா நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ், 46. இவர் மது குடிப்பழக்கம் உடையவர். உடல்நிலை நிலை பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வருகிறார். கடந்த 19ம் தேதி வீட்டில் படுத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது, அவரை காணவில்லை.
இதுகுறித்து, அவரது மனைவி ஸ்டெல்லா கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.