ADDED : ஜூலை 09, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
லாஸ்பேட்டை, எழில் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 44. இவர் சின்ன கோட்டக்குப்பத்தில் ரிசார்ட் நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஏப்ரல் 15ம் தேதி வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது மனைவி தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.