ADDED : ஜூலை 18, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்தார்.
சேதராப்பட்டு முத்தமிழ் நகரை சேர்ந்தவர் குமார், 49, இவர் சொந்தமாக கிரேன் வைத்து தொழில் செய்து வருகிறார். அடிக்கடி மது குடிப்பதை அவரது மனைவி தட்டி கேட்டதால் கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி, வெளியில் சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது மனைவி சிவகங்கை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.