/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் மக்கள் மன்றத்தில் 52 புகார்களுக்கு உடனடி தீர்வு
/
போலீஸ் மக்கள் மன்றத்தில் 52 புகார்களுக்கு உடனடி தீர்வு
போலீஸ் மக்கள் மன்றத்தில் 52 புகார்களுக்கு உடனடி தீர்வு
போலீஸ் மக்கள் மன்றத்தில் 52 புகார்களுக்கு உடனடி தீர்வு
ADDED : ஏப் 12, 2025 10:00 PM

புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி டி.ஜி.பி., உத்தரவின் பேரில், சனிக்கிழமைகளில் நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தார். இதில், மேற்கு எஸ்.பி., வம்சித ரெட்டி, இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், சரண்யா உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.
இதேபோல், முத்தியால்பேட்டை ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., ரகுநாயகம், கோரிமேடு ஸ்டேஷனில் எஸ்.பி., வீரவல்லவன் தலைமையிலும், போக்குவரத்து வடக்கு நிலையத்தில் சீனியர் எஸ்.பி., பிரவீன் திரிபாதி, எஸ்.பி.,க்கள் செல்வம், மோகன்குமார் தலைமையிலும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், பொதுமக்களிடம் இருந்து 83 புகார்கள் பெறப்பட்டு, 52 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 46 பெண்கள் உட்பட 235 பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.