sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆடம்பர தேர்பவனி முதல்வர் துவக்கி வைப்பு

/

ஆடம்பர தேர்பவனி முதல்வர் துவக்கி வைப்பு

ஆடம்பர தேர்பவனி முதல்வர் துவக்கி வைப்பு

ஆடம்பர தேர்பவனி முதல்வர் துவக்கி வைப்பு


ADDED : அக் 14, 2024 08:13 AM

Google News

ADDED : அக் 14, 2024 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 70வது ஆண்டு பெருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி, காலை 7:30 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர் மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, அருட்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. விழாயொட்டி, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7:30 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா தலைமையில் திருப்பலி நடந்தது. மாலை 6:00 மணிக்கு நடந்த ஆடம்பர தேர்பவனியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

இதில், திரளான கிறிஸ்துவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (14ம் தேதி) தட்டாஞ்சாவடி பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us