/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.சி.சி., அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழா
/
என்.சி.சி., அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழா
என்.சி.சி., அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழா
என்.சி.சி., அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழா
ADDED : டிச 10, 2024 06:43 AM

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டையில் என்.சி.சி., அதிகாரிகளுக்கு புதியதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தை திறப்பு விழா நடந்தது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் புதுச்சேரி லாஸ்பேட்டை சாந்தி நகர் மூகாம்பிகை கோவில் அருகில், திருமணமான என்.சி.சி. அதிகாரிகளுக்கு 10, இளநிலை உதவி ஆய்வாளர்களுக்கு 12 மற்றும் ஜாவான்களுக்கு 18 வீடுகள் என மொத்தம் 40 வீடுகளை கொண்ட குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதில் (மெஸ்) உணவு விடுதி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு வளாகம் திறப்பு விழா நேற்று நடந்தது.இதில்,தேசிய மாணவர் படை தேசிய இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர் பால்சிங் காணொளி மூலம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார், தேசிய மாணவர் படையின் உதவி இயக்குனர் கமாண்டர் ராகவ் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி தேசிய மாணவர் படையின் கமாண்டர் கர்னல் ராகேஷ் குமார் மேனன், சுபேதார் எம்.எஸ்.நாயுடு ஆகியோர் திறந்து வைத்தனர்.
முன்னதாக உதவி இயக்குனர் கமாண்டர் ராகவ் மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

