ADDED : ஜன 23, 2024 04:48 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : ஆச்சார்யா பள்ளி வளாகத்தில் ஆச்சார்யா சிவில் சர்வீஸ் அகாடமி திறப்பு விழா நடந்தது.
பள்ளி முதல் நிலை முதல்வர் ஷாலினி வரவேற்றார். ஆச்சார்யா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதன்மையுரையாற்றினார்.
டாக்டர் சந்தோஷ் மேத்யூ, சிவில் சர்வீஸ் அகாடமியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஆச்சார்யா சிக்சா மந்திர் பள்ளி நிர்வாக முதல்வர் ஜெயிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த அடகாமியில் சிவில் சர்வீஸ் பயிற்சிகள் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
