ADDED : மே 02, 2025 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: புதுச்சேரி அடுத்த திருபுவனைபாளையத்தில் ரூ.46.30 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., துவக்கிவைத்தார்.
திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருபுவனைபாளையத்தில் பெருமாள் நகர் மற்றும் ஜெயா நகர் சாலைகளை ரூ.46.30 லட்சம் செலவில் தார் சாலைகளாக மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமையேற்று, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் கிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.