/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்டாஞ்சாவடி பள்ளியில் சுதந்திர தின விழா
/
தட்டாஞ்சாவடி பள்ளியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 03:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, அரசு தொடக்கப் பள்ளியில், 79வது சுதந்திர தின விழா நடந்தது.
பள்ளி ஆசிரியை உமாதேவி வரவேற்றார். தலைமை ஆசிரியை கீதா தலைமை தாங்கினார். விழாவையொட்டி, நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுச்சேரி லேடிஸ் சர்கிள் 187யை சார்ந்த சரவண பிரியா, மோனிகா அனுப், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
ஆசிரியை நித்யா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பிரேமா, காயத்ரி, மாரியம்மா, ரேவதி அருணா, கன்னிகா மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

