/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கடலோர காவல் படையினர் ரத்த தானம்
/
இந்திய கடலோர காவல் படையினர் ரத்த தானம்
ADDED : பிப் 01, 2026 05:24 AM

புதுச்சேரி: இந்திய கடலோர காவல் படையின் 50ம் ஆண்டை முன்னிட்டு, இந்திய கடலோர காவல்படை வீரர்கள் நேற்று முன்தினம் ரத்த தானம் வழங்கினர்.
இந்திரா காந்தி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்வை இந்திய கடலோர காவல்படை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா துவக்கி வைத்து, ரத்த தானம் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியை இந்திய கடலோர காவல்படை மருத்துவர் ஆரகுலா ஆதித்யா ஒருங்கிணைத்தார். இந்திய கடலோர காவல்படை உதவி கமாண்டர் ஜிதேந்திர குமார், உதவி கமாண்டர் சுனவுத்தி சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சார்பில், இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் ரத்த தானம் வழங்கினர்.

