/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிப்பெய்டு மீட்டரை கண்டித்து இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
பிரிப்பெய்டு மீட்டரை கண்டித்து இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
பிரிப்பெய்டு மீட்டரை கண்டித்து இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
பிரிப்பெய்டு மீட்டரை கண்டித்து இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 15, 2025 05:07 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு, மின் துறையின் மூலம் வீடுகளுக்கு பிரிப்பெய்டு டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, பாக்கமுடையான்பட்டு, தாகூர் நகர் ஆகிய மின்துறை அலுவலகங்கள் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலக் குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சலீம், காமராஜர் நகர் தொகுதி துணை செயலாளர் தயாளன், லாஸ்பேட்டை தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், மாநில பெருளாளர் சுப்பையா, தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.

