sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீஸ் உயர் அதிகாரி நியமிக்க வலியுறுத்தல்

/

போலீஸ் உயர் அதிகாரி நியமிக்க வலியுறுத்தல்

போலீஸ் உயர் அதிகாரி நியமிக்க வலியுறுத்தல்

போலீஸ் உயர் அதிகாரி நியமிக்க வலியுறுத்தல்


ADDED : ஜன 20, 2025 06:14 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காலப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் போலீஸ் உயர் அதிகாரி நியமிக்க வேண்டுமென, புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், கடந்த 11ம் தேதி அத்துமீறி நுழைந்த நபர்கள் வடமாநில மாணவியிடம் தகராறு செய்தனர்.

புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நிரந்தர ஊழியர்கள் நியமனம், பாதுகாப்பில் குறைப்பாடுகள் காணப்படுகிறது.

எனவே புதுச்சேரி பல்லைக்கழகத்தை போல் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு கருதி போலீஸ் உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி மேம்பாட்டிற்காக அதிகமாக நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் அந்த நிதியை முறையாக செலவிடப்படுவதில்லை.

இதனால் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us