sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பட்டய கணக்காளர்கள் நிறுவன துணை பிராந்திய மாநாடு

/

பட்டய கணக்காளர்கள் நிறுவன துணை பிராந்திய மாநாடு

பட்டய கணக்காளர்கள் நிறுவன துணை பிராந்திய மாநாடு

பட்டய கணக்காளர்கள் நிறுவன துணை பிராந்திய மாநாடு


ADDED : ஜூன் 29, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் துணை பிராந்திய மாநாட்டை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.

முதலியார்பேட்டை, நுாறடி சாலை தனியார் ஹோட்டலில் நேற்று நடந்த மாநாட்டை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் ரேவதி ரகுநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, நாராயணன், புதுச்சேரி கிளையின் தலைவர் குஷால் ராஜ் உட்பட உறுப்பினர்கள், வல்லுநர்கள், பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், கவர்னர் பேகையில்,'இந்த நிறுவனம், கணக்கியல் நிபுணர்களை மட்டுமல்ல, நிதித் தலைவர்கள், ஆலோசகர்கள், தேசிய கட்டமைப்பாளர்களையும் உருவாக்குவது பெருமைக்குரிய விஷயமாகும். பெரிய நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவது, மட்டுமல்லாமல், வரி வசூலை ஒழுங்குபடுத்துதல், நிதி முறைகேடுகளை தடுப்பதில் அரசு நிர்வாகத்திற்கு உதவுகிறீர்கள்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாடு, வெளிப்படையான நிர்வாகத்திற்கு உதவுதல், அல்லது டிஜிட்டல் இணக்கத்தை மேம்படுத்துதல், என எதுவாக இருந்தாலும், புதுச்சேரி பட்டயக் கணக்காளர்கள் பொருளாதரத்தை மேம்படுத்துபவர்களாகவும், நம்பகமான ஆலோசகர்களாகவும், செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us