/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகரப்பகுதி மின் நுகர்வோர்கள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்
/
நகரப்பகுதி மின் நுகர்வோர்கள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்
நகரப்பகுதி மின் நுகர்வோர்கள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்
நகரப்பகுதி மின் நுகர்வோர்கள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்
ADDED : நவ 25, 2025 05:25 AM
புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரிமின்துறை நகர இயக்குதல் மற்றும் பராமரித்தல் கோட்ட செயற்பொறியாளர் செய்திகுறிப்பு:
புதுச்சேரி நகர்ப்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குட்பட்ட கடற்கரை சாலை. வம்பாகீரைப்பாளையம், திப்புராய்பேட், நெல்லித்தோப்பு, எல்லப்பிள்ளைசாவடி வரை, முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை, சாரம், ரெயின்போ நகர் வெங்கட்டா நகர்.
பாலாஜி நகர், சுதந்திர பொன் விழா நகர், திருமுடி சேதுராமன் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்து மின் துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

