ADDED : ஜன 05, 2026 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சுற்றுலாத்துறை சார்பில் 31வது யோகா திருவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச யோகா திருவிழா ஜனவரி மாதம் முதல் வாரம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 31வது யோகா திருவிழா நேற்று மாலை புதுச்சேரி காந்தி திடலில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலாத்துறை இயக்குனர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சி றப்பு விருந்தினராக மலேசியா நாட்டு துாதரக அதிகாரி விஷ்ணுவரதன் காளிமுத்து கலந்து கொண்டார். விழாவில் ட்ரோன் ேஷா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன .

