sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி விமான நிலையத்தில் உதவியாளர் பணிக்கு நேர்காணல்

/

புதுச்சேரி விமான நிலையத்தில் உதவியாளர் பணிக்கு நேர்காணல்

புதுச்சேரி விமான நிலையத்தில் உதவியாளர் பணிக்கு நேர்காணல்

புதுச்சேரி விமான நிலையத்தில் உதவியாளர் பணிக்கு நேர்காணல்


ADDED : நவ 19, 2024 06:55 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் விமான சேவை துவங்கவுள்ள இண்டிகோ நிறுவனம் உதவியாளர் பணிக்கான நேர்காணலை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நடத்தியது.

புதுச்சேரியில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு விமான சேவை இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது சேவையை முடித்துக் கொண்டு வெளியேறியது. இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அடுத்த மாதம் டிச. 20ம் தேதி முதல், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு 72 பேர் செல்லக்கூடிய விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது.

பெங்களூரில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி வரும் இண்டிகோ விமானம் ஐதராபாத்திற்கு சென்று மீண்டும் புதுச்சேரி திரும்பி, இங்கிருந்து பெங்களூரு சென்றடைகிறது.(ஏற்கனவே ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இயக்கிய அதே சேவை) இண்டிகோ விமான சேவை நேரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பயணிகளின் லக்கேஜ்களை எடுத்துச் செல்வது உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் 10 உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலைய வளாகத்தில் நேற்று இண்டிகோ நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி தலைமையில் நடந்தது.

இதில் 45க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விமான சேவைக்காக விமான நிலையத்தை சுத்தப்படுத்தும்பணிகளும் நடந்தது.






      Dinamalar
      Follow us