ADDED : ஏப் 13, 2026 11:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வாகனம் மோதிய விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத நபரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் கடந்த 6ம் தேதி, 45வயது மதிக்கதக்கவர் சாலையை கடக்கும் போது, அவ்வழியாக சென்ற பி.ஒ.01, பி.பி.9618 எண்ணுடைய மினி சரக்குவேன் வாகனம் அவர் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மூலம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனை டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, போக்குவரத்து கிழக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
