ADDED : ஜூன் 02, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காமராஜ் சாலை, தனியார் ஓட்டல் அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர், கடந்த 28ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை.
இதுகுறித்து, டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.