ADDED : பிப் 10, 2026 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாலையில் அடையாளம் தெரியாத இறந்து கிடந்த முதியவரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அண்ணாசலை பிளாட்பாரத்தில் கடந்த 6ம் தேதி, 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

