/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரும்பு கிரில் பாலம் சீரமைப்பு பணி
/
இரும்பு கிரில் பாலம் சீரமைப்பு பணி
ADDED : ஜூன் 14, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சாரம், தென்றல் நகரில் சேதமடைந்த வாய்க்கால் இரும்பு கிரில் பாலம் சீரமைக்கும் பணி நடந்தது.
காமராஜர் நகர் தொகுதி சாரம், தென்றல் நகர் பகுதியில் வடிகால் வாய்கால் மேல் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் பாலம் 2 மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவபிரகாசம் நேற்று நேரில் பார்வையிட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் மூலம் சேதமடைந்த இரும்பு கிரில் பாலத்தை சீரமைக்கும் பணி நடந்தது. காங்., பொறுப்பாளர் தேவதாஸ் உடனிருந்தார்.