/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவித் தொகைக்கான அடையாள அட்டை வழங்கல்
/
உதவித் தொகைக்கான அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஜன 10, 2024 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியில் முதியோர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு, ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை, அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.
மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம், ராஜ்பவன் தொகுதியில் முதியோர், கணவனை இழந்த பெண்கள், மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான வழங்கும் நிகழ்வு, அம்பலத்தடையார் மடம் வீதியில் நடந்தது.
இதற்கான அடையாள அட்டைகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், ராஜ்பவன் தொகுதி முக்கிய பிரமுகர்கள், துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

