ADDED : மார் 17, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அடையாள அட்டையை சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார்.
தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
ஊரக வேலை வாய்ப்பு திட்ட அதிகாரிகள், மணவெளி தொகுதி பா.ஜ., தலைவர் லட்சுமிகாந்தன், ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.