ADDED : அக் 17, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் லாஸ்பேட்டை தொகுதி சேர்ந்த முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர் உள்ளிட்டோர் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ., வைத்தியநாதன் தலைமை தாங்கி, 300 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். கமலா அறக்கட்டளை செயல் அலுவலர் ரமா வைத்தியநாதன், துறை இயக்குநர் முத்துமீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.