ADDED : மார் 10, 2026 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சமூக நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிக்கான ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கினார்.
அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு தலா 30 ஆயிரம் வீதம் 40 பயனாளிகளுக்கு 12 லட்சம் ரூபாய், 103 மீனவர்களுக்கு மீனவர் உதவித்தொகை மற்றும் 330 முதியவர்கள் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கு உதவித்தொகை ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளி களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அதிகாரிகள், என்.ஆர்., காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

