
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுக கன்சல்டண்சி சேவை மையம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
ரெட்டியார்பாளையம் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி தலைமை தாங்கினார். இதில், புதுச்சேரியை சேர்ந்த 6 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஊழியர்களை தேர்வு செய்தனர்.
முகாமில், புதுச்சேரியை சேர்ந்த படித்த இளைஞர்கள் 146 பேர் கல்வி தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டனர்.
இதில், 58 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டது.