ADDED : டிச 09, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் நாராயணன் மனைவி குப்பம் மாள், 86; இவர் கடந்த மாதம் 18ம் தேதி, அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவமனைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து, மருத்துவ உதவி செய்வது போல, அவரது கவனத்தை திசை திருப்பி, அவர் அணிந்திருந்த 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.5 சவரன் தங்க தோடு, கம்பல் ஆகியவற்றை வாங்கி சென்றார்.
அவரது பேரன் ரகு, புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.

