ADDED : மார் 25, 2026 11:20 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக கட்டடத்தின் முன் தினக்கூலி ஊழியர்கள் நேற்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டனர்.
சங்க தலைவர் சிவசங்கர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செல்லதுரை, பொருளாளர் டேனியில்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணி நிரந்தரம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடையாள அட்டை, ஓட்டு அட்டை, ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிப்போம் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
