/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு
/
முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு
முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு
முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2026 11:17 PM

புதுச்சேரி: முதிலியார்பேட்டை தொகுதி, பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார், சுதேசி மில் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜ., சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று, சுதேசி மில் பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். இதனைக் கேட்ட ஜான்குமார், 'நான் வெற்றி பெற்று இப்பகுதியில் உள்ள பிரச்னைகளை சரி செய்து தருவேன்' என உறுதியளித்தார். பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

