sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காங்., தி.மு.க.,வுக்கு பல கோடி நிதி; லாட்டரி அதிபர் வழங்கினார் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., 'திடுக்' புகார்

/

காங்., தி.மு.க.,வுக்கு பல கோடி நிதி; லாட்டரி அதிபர் வழங்கினார் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., 'திடுக்' புகார்

காங்., தி.மு.க.,வுக்கு பல கோடி நிதி; லாட்டரி அதிபர் வழங்கினார் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., 'திடுக்' புகார்

காங்., தி.மு.க.,வுக்கு பல கோடி நிதி; லாட்டரி அதிபர் வழங்கினார் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., 'திடுக்' புகார்


ADDED : நவ 24, 2024 04:47 AM

Google News

ADDED : நவ 24, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தேர்தல் செலவுக்கு லாட்டரி அதிபரிடம் காங்., தி.மு.க., பணம் பெறவில்லையா என பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர், கூறியதாவது:

காமராஜ் நகர் தொகுதியில் நடந்த விழாவில், தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்றார்.

விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் குறித்து காங்., தி.மு.க., கட்சிகள் விமர்சிக்கின்றன. அக்கட்சிகளுக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பல கோடி தேர்தல் நிதி பத்திரம் மூலம் வழங்கியுள்ளார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, 2016ம் ஆண்டு நரி தந்திரத்தை பயன்படுத்தி அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டி ஜான்குமாரை ஏமாற்றினார். அவர் கொல்லைப்புறமாக முதல்வர் பதவியில் அமர்ந்தார்.

வைத்தியலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சிவாவும் விமர்சனம் செய்கின்றனர். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தி.மு.க.,வுக்கு பல கோடி தேர்தல் நிதி வழங்கியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல் நிதி பெற்றதை நிருபித்தால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாரா.

காங்., ஆட்சியில் லாட்டரி வியாபாரம் கொடிகட்டி பறந்தது. அப்போது வாய் திறக்காத முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தற்போது அரசியல் நாகரிகம் இழந்து பேசுவதை கண்டிக்கிறோம்' என்றார்.

பேட்டியின்போது பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கரன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us