ADDED : பிப் 15, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : கோரிமேடு இந்திராநகர், அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று மழலையர் விழா நடந்தது.
விழாவில் வட்டம் 2ல் உள்ள 40 பள்ளிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 700 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளிக்குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்வில், பெற்றோர் பலர் பங்கேற்று, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
விழாவுக்கு, வட்டம் -2 துணை ஆய்வாளர் குணசுந்தரி தலைமை தாங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி மற்றும் விழாக்குழுவினர் மேற்கொண்டனர்.

