/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்க்காடு கோவில் நில மோசடி வழக்கு சஸ்பெண்ட் அதிகாரி மீண்டும் கைது
/
கோர்க்காடு கோவில் நில மோசடி வழக்கு சஸ்பெண்ட் அதிகாரி மீண்டும் கைது
கோர்க்காடு கோவில் நில மோசடி வழக்கு சஸ்பெண்ட் அதிகாரி மீண்டும் கைது
கோர்க்காடு கோவில் நில மோசடி வழக்கு சஸ்பெண்ட் அதிகாரி மீண்டும் கைது
ADDED : பிப் 21, 2024 09:04 AM

புதுச்சேரி : கோர்க்காடு பாலசுந்தர விநாயகர் கோவில் இடத்தை போலி ஆவணம் மூலம் பட்டா பெற்று மோசடி செய்த வழக்கில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி பாலாஜி கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, வில்லியனுார் கோர்க்காடு பாலசுந்தர விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக ரூ. 4 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2021ம் ஆண்டு செட்டில்மெண்ட் அதிகாரியாக இருந்த பாலாஜி, தனி நபர் பெயரில் பட்டா வழங்க உத்தரவிட்டார். அதன்பின், அவர், பதவி உயர்வு பெற்ற மீன்வளத்துறை இயக்குநராக சென்று விட்டார்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம், விழுப்புரம் நாகப்பட்டினம் சாலை பணிக்காக கோவில் நிலத்தின் ஒரு பகுதியை கையப்படுத்தியது. இதற்கு இழப்பீடு தொகை ரூ. 70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.
லாஸ்பேட்டை கிருஷ்ணமூர்த்தி மனைவி லதா, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய இழப்பீடு தொகையை தங்களுக்கு வழங்க மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில், கோவில் நிலத்திற்கு போலி பட்டா பெற முயற்சிப்பதாக நில அளவைத்துறை இயக்குநர் செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி., மோகன்குமார் தலைமையிலான போலீசார் பட்டா வழங்க உத்தரவிட்ட பாலாஜி, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை கிருஷ்ணமூர்த்தி மனைவி லதா, தட்சிணாமூர்த்தி மனைவி ஹேமலதா (எ) நந்தினி, சுந்தராம்பாள், லாஸ்பேட்டை ராமமூர்த்தி ஆகியோர் மீது மோசடி வழக்கு செய்தனர். இதில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை புதுச்சேரி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் கடந்த வாரம் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரி அசிஸ்டென்ட் ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, முன்னாள் சென்டில்மென்ட் அதிகாரியான பாலாஜியை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர் காமாட்சியம்மன் கோவில் நில மோசடி வழக்கில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள லதா, ஹேமலதா, சுந்தராம்பாள் ஆகியோரை கைது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

