
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை நாக முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை ராம்ஜி நகரில், நாகமுத்துமாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபி ேஷகம் விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு கும்பாபி ேஷகம் விழா நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஷ்யாம் சுந்தர் செய்திருந்தார்.