/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செட்டிப்பட்டு கோவிலில் 8ம் தேதி கும்பாபிேஷகம்
/
செட்டிப்பட்டு கோவிலில் 8ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : பிப் 06, 2026 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன், மாரியம்மன், விநாயகர், முருகன், காளியம்மன், ஏழை மாரியம்மன், ஐயனாரப்பன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவில்களில் மகா கும்பாபிேஷக விழா வரும் 8ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, இன்று (6ம் தேதி) காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.
முக்கிய நிகழ்வாக (8ம் தேதி) காலை 7:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி ஆரம்பம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10:30 மணிக்கு திரவுபதியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் கும்பாபிேஷகம் நடக்கிறது.

