/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூனிச்சம்பட்டு கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
கூனிச்சம்பட்டு கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : மார் 19, 2024 10:56 PM

திருக்கனுார் : கூனிச்சம்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை சுதர்சன ஹோமம், அனைத்து மூர்த்திகளுக்கும் எண்ணெய் சாற்றி, பூர்ண அபிஷேகம் நடந்தது.
மாலை கலசங்கள் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், முதல் கால பூஜை நடந்தது.
முக்கிய நிகழ்வாக இன்று (20ம் தேதி) காலை 9:00 மணிக்கு மேல் திரவுபதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் நடராஜன், திருகுமரன், கலியபெருமாள், லட்சுமணன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

