UPDATED : ஜூலை 28, 2026 11:10 PM
ADDED : ஜூலை 28, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை முத்தைய முதலியார் வீதியில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில் 43ம் ஆண்டு குத்து விளக்கு பூஜை ஜூலை 29ல் நடக்கிறது.
பவுர்ணமியை முன்னிட்டு முத்தியால்பேட்டை சுந்திர விநாயகர் சுப்ரமணியசுவாமி, சித்திவிநாயகர் கோவிலில் 43ம் ஆண்டு குத்து விளக்கு பூஜை இன்று மாலை 5:00 மணிக்கு மகாலட்சுமி பூஜை எனப்படும் திருவிளக்கு பூஜை நடக்கிறது.
இப்பூஜையில் சுமங்கலிகள், கன்னிப்பெண்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான செங்குந்த மரபினர்கள் செய்துள்ளனர்.
