/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED : டிச 08, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 14ம் ஆண்டு விழாவையொட்டி, ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது.
இதனை முன்னிட்டு, காலை 9 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் ஸ்ரீந்ருஸிம்ஹ ஸகஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை வேத ஆகம ஸம்ப்ரக்ஷண லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் செய்திருந்தது.

