ADDED : ஆக 02, 2025 06:54 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : ஆணவ படுகொலை கண்டித்து புதுச்சேரி, அண்ணா சிலை அருகே சட்ட கல்லுாரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின ஐ.டி.ஊழியர் கவின், கடந்த 27ம் தேதி நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.
அதனை கண்டித்து அம்பேத்கர் சட்டக் கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவியர் நேற்று அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
