/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் 'ழ'கரம் 2025 - தமிழர் பெருவிழா
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் 'ழ'கரம் 2025 - தமிழர் பெருவிழா
மணக்குள விநாயகர் கல்லுாரியில் 'ழ'கரம் 2025 - தமிழர் பெருவிழா
மணக்குள விநாயகர் கல்லுாரியில் 'ழ'கரம் 2025 - தமிழர் பெருவிழா
ADDED : ஜன 11, 2025 06:50 AM

புதுச்சேரி: புதுச்சேரி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் திருநாளை முன்னிட்டு 'ழ'கரம் 2025 - தமிழர் பெருவிழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி நோக்கவுரையாற்றினார்.
கல்விக் குழுமத்தின் இணை செயலாளர் வேலாயுதம் வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் ராஜராஜன் சிறப்புரையாற்றினர். கல்லுாரி மாணவர்கள் தமிழர்களின் பெருமை மற்றும் கலை இலக்கிய பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக தமிழர் வழிபாடு, மருத்துவம், ஐந்திணை, வணிகம், விருந்தோம்பல், பாரம்பரிய உணவுகள் உள்ளிட்ட 23 அரங்குகள் அமைத்திருந்தனர்.
இதில், உறங்கும் தமிழர் வரலாறு குமரிக்கண்டம், அறம் கூறும் அவையம், தமிழர்த் திருவிழா, பண்டையத் தமிழகம், தெருக்கூத்து அரிச்சந்திர புராணம் ஆகிய அரங்குகள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தன.
அடுத்து தமிழ் மாத விழாக்கள் பழங்காலப் புதுச்சேரி, நினைவுச் சின்னங்கள், தமிழர் திருவிழா, பேச்சியம்மன் திருவிழா, திருவிளையாடல் புராணம், ஆகிய அரங்குகள் ஆறுதல் பரிசு பெற்றது. சிறந்த அரங்குகள் அமைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் விழாவினை ஒருங்கிணைத்தனர்.