/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் அட்டை
/
பள்ளி மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் அட்டை
ADDED : அக் 09, 2024 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை நுாலக உறுப்பினர்களாக மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
காமராஜர் மணி மண்டப நுாலகத்தில், வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில், 'வாசிக்கும் தன்மையை நேசிக்கும் தலைமுறை' எனும் தலைப்பில், பள்ளி மாணவர்களை உறுப்பினர்களாக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சபாநாயகர் செல்வம், ஜான்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நுாலக உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், வீரத்தமிழரசி வேலு நாச்சியார் இலக்கிய சமூக இயக்க தலைவர் கலைவரதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

