ADDED : அக் 01, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நாளை 2ம் தேதி மதுகடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரியில் நாளை 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கலால் ஆணையர் உத்தரவின்படி, புதுச்சேரியில் இயங்கி வரும் கள், சாராயம், பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகள் மற்றும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும்.