/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்
/
மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்
மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்
மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்
ADDED : அக் 02, 2025 01:49 AM
புதுச்சேரி: இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை விரைந்து மீட்க மா.கம்யூ., வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ராமச்சந்திரன், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
கடலில் மீன் பிடித்த காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 12 மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையம் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.