sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குடிநீர் வழங்காததை கண்டித்து மடுகரையில் பெண்கள் சாலை மறியல்

/

குடிநீர் வழங்காததை கண்டித்து மடுகரையில் பெண்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து மடுகரையில் பெண்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து மடுகரையில் பெண்கள் சாலை மறியல்


ADDED : அக் 15, 2024 06:33 AM

Google News

ADDED : அக் 15, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: மடுகரையில் குடிநீர் வராததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் மடுகரை-புதுச்சேரி 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மூகாம்பிகை நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. பொறுமை இழந்த அப்பகுதி பெண்கள்நேற்று காலை 7 மணிக்கு காலி குடங்களுடன் மடுகரை-புதுச்சேரி சாலையில்மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வர வேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை இளநிலைபொறியாளர் திருவேங்கடம் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் 20 நாட்களுக்குள் குடிநீர் பிரச்னையை சரிசெய்து தருவதாக உத்திரவாதம் அளித்தார். அதையேற்றுசாலை மறியலில் ஈடுபட்டஅனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் மடுகரை-புதுச்சேரி சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us