/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரும்பை பாலாதிரிபுர சுந்தரி கோவிலில் வரும் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம்
/
இரும்பை பாலாதிரிபுர சுந்தரி கோவிலில் வரும் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம்
இரும்பை பாலாதிரிபுர சுந்தரி கோவிலில் வரும் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம்
இரும்பை பாலாதிரிபுர சுந்தரி கோவிலில் வரும் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம்
UPDATED : ஏப் 05, 2025 12:07 PM
ADDED : ஏப் 05, 2025 07:41 AM
புதுச்சேரி : இரும்பை பாலாதிரிபுர சுந்தரி அம்பாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் 7 ம் தேதி காலை நடக்கிறது.
புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில் உள்ள பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 7 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பூஜை கடந்த 31ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது.
நேற்று காலை மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், தீர்த்தசங்ரஹணம், அக்னி சங்க்ரஹணம் நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.
இன்று காலை 8 மணிக்கு விசேஷ சந்தி விக்னேஸ்வர பூஜை, அங்குர பூஜை, மண்டப பூஜை, வேதிகார்ச்னை, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாக பூஜை, திரவியாஹூதி, பூர்ணாஹூதி நடக்கிறது. மாலை 5 மணிக்கு அங்குர பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடக்கிறது.
நாளை 6ம் தேதி காலை விசேஷ சந்தி விக்னேஸ்வர பூஜை, அங்குர பூஜை, நான்காம் கால யாக பூஜை திரவ்யாஹூதி, பிரம்மச்சாரி பூஜை, கன்யா பூஜை,. விமான கலசங்கள் பிரதிஷ்டை, மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ரஜத பந்தனம் சாற்றப்படுகிறது.
அன்று மாலை 5 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையை தொடர்ந்து சுமங்கலி பூஜை, வடுக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடக்கிறது.
நாளை மறுநாள் 7ம் தேதி காலை 5.00 மணிக்கு விசேஷ சாந்தி விக்னேஸ்வர பூஜை, அங்குர பூஜை, 6ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், யாத்ரா ஹோமத்தை தொடர்ந்து கலசம் புறப்பாடாகிறது.
காலை 9:20 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார விமானங்களுக்கும், 9:40 மணிக்கு பாலா திரிபுர சுந்தரி அம்பாளுக்கும், 9:50 மணிக்கு ஸ்ரீராஜ மாதங்கி அம்பாளுக்கும், 10:00மணிக்கு ஸ்ரீ வாராஹி அம்பாளுக்கும், 10:05 மணிக்கு பால பைரவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம், உபசாரத்தை தொடர்ந்து கன்யா பூஜை, தருணி பூஜை, சுவாஷினி பூஜை, வடுக பூஜை, தீபாராதனை மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்புறப்பாடு நடக்கிறது.

