ADDED : மார் 10, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார், : ஆரோவில் பகுதியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு சிவாலயா நாட்டியாலயம் சார்பில், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
'சர்ட்டி டூவ்' கால்பந்து மைதானத்தில் இரவு 7:00 மணி முதல் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. 50க்கும் மேற்பட்ட மாணவிகள், குழு நடனம், தனி நடனம் ஆடினர்.
வெளிநாட்டினர், உள்ளூர் வாசிகள் என அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாலயா நாட்டியாலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

