sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோமாதா ஆலயத்தில் 2ம் தேதி மகாளய அமாவாசை

/

கோமாதா ஆலயத்தில் 2ம் தேதி மகாளய அமாவாசை

கோமாதா ஆலயத்தில் 2ம் தேதி மகாளய அமாவாசை

கோமாதா ஆலயத்தில் 2ம் தேதி மகாளய அமாவாசை


ADDED : செப் 29, 2024 06:05 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கருவடிக்குப்பம், கோமாதா ஆலயத்தில், மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் அக்., 2ம் தேதி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோமாதா ஆலய ராஜா சாஸ்திரி கூறிய தாவது:

மகாளயபட்சம் ஆரம்பத்தில் இருந்து, மகாளய அமாவாசை முடிய உள்ள, 15 நாட்கள் மகாளய புண்ணிய காலமாகும். இந்த நாட்களில், நம் மீது அன்பு, பாசம் காட்டி வளர்த்து நமக்காக பல தியாகங்கள் செய்த முன்னோர்களை வணங்க வேண்டும்.

பிறகு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் அனுமதி பெற்று முன்னோர்கள் பூமியை வந்தடைந்து, மகாளய பட்ச நாட்களாக, 15 நாட்களும் நம்முடன் தங்கி நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதிக்கின்றனர்.

இந்த நாட்களில், தங்களது வீட்டில் பூஜை செய்வதை விட, பசுக்கள் நிறைந்த இடத்தில் பூஜை செய்தால் அதிக பலன்களை பெறலாம். அந்த வகையில், மகாளயபட்ச காலம் துவங்கிய கடந்த, 18ம் தேதி முதல் கருவடிக்குப்பம், ஓம் சக்தி நகரில் உள்ள கோமாதா ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

மகாளயபட்சம் நிறைவு பெறும் அமாவாசை தினமான வரும் அக்., 2ம் தேதி காலை முதல் கோமாதா கோவிலில், கோ பூஜை, முன்னோர்கள் வழிபாடு, தர்ப்பணம், சிறப்பு பூஜை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விபரங்களுக்கு, 98423-29770, 98423-27791 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us