ADDED : மே 13, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
வானுார்: வானுார் அருகே பேச மறுத்த காதலியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டை, பெரிய தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஆரோக்கியநாதன், 24; இவர், 20 வயது பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி பிரச்னை செய்ததால் கடந்த 4 மாதங்களாக ஆரோக்கியநாதனிடம், அந்த பெண் பேசுவதை தவிர்த்துள்ளார். நேற்று பெண்ணை சந்தித்த ஆரோக்கியநாதன், வானுார் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் சுடுகாடு பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து ஆரோக்கியநாதனை கைது செய்தனர்.
