ADDED : ஜூன் 02, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் நிரவி அக்கரைவட்டம் அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்த லுார்துமேரி, 56; இவர் வீட்டு அருகில் நாகையா, 65; என்பவர் வசித்து வருகிறார்.இவர் தினமும் மதுஅருந்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் லுார்துமேரி வீட்டு வாசலில் பூகட்டிக்கொண்டிருந்த போது பைக்கில் வந்த நாகையா போதையில் லுார்துமேரி மீது மோதுவது போல் வந்தார். இதை தட்டிக்கேட்ட லுார்துமேரியை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த லுார்துமேரியின் புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்குப் பதிந்து நாகையாவை கைது செய்தனர்.